சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது வைகோ போன்றவர்கள் சேர்ந்து ஈழம் பெற்றுத் தருவோம் என்று கூறினார்களே? இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கழக கூட்டணி வெற்றி பெற்றதால் பலரும் ஆட்சி மாறினால் ஈழம் கிடைத்துவிடும் என்று அள்ளிவிட்டுக் கொண்டு இருந்தார்கள். இதோ தேர்தலில் வெற்றி பெற்ற செய்திகள் வந்து கொண்டு இருக்கும் போதே அ.தி.மு.க. தலைவி கொடுத்து இருக்கும் பேட்டியின் காணொளியை பாருங்கள். பேட்டி எடுக்கும் ரபி பெர்னார்டு ஈழத் தமிழர்கள் என்று குறிப்பிட்டு கேட்கிறார். அதற்கு பதில் அளிக்கும் அ.தி.மு.க. தலைவியோ இலங்கைத் தமிழர்கள் என்றும் இலங்கை வாழ் தமிழர்கள் என்று மட்டுமே குறிப்பிடுகிறார். மறந்தும் கூட அவர் வாயிலிருந்து ஈழம் என்ற வார்த்தை வரவே இல்லை. நிஜம் இப்படி இருக்க இத்தனை நாட்கள் தமிழின துரோகி என்று பட்டம் கட்டியவர்களின் நம்பகத்தன்மையை நீங்களே கண்டு தெரிந்து கொள்ளுங்கள்
Pages
புதிய ஆட்சியில் ஈழம் மலருமா?
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அது மட்டுமா.. இந்த விசயத்தில் மாநில அரசு ஒரு அளவுக்கு தான் செய்ய முடியும், இது சர்வ தேச பிரச்சனை எனவே மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துவோம் னு சொல்லியிருக்காங்க... இத நாங்க சொன்ன ஈழத்துக்கு எதிரானவன் னு சொல்லுறானுக.. அதே அந்த அம்மையார் சொன்ன ஈழத்தை மீட்டுக்க வந்த தாயே னு சொல்லு புகழுராணுக... என்ன கொடுமை சார் இது...
ஆம் தோழர், கழகம் மீது திட்டமிட்டு கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்
Post a Comment